சிபிஐ(எம்)-ன் 24-வது அகில இந்திய மாநாடு வரும் ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடக்க இருக்கிறது. அதில் சமர்ப்பிக்கப்பட உள்ள நகல் அரசியல் தீர்மானம் (Draft Political Resolution) இன்று கட்சியின் தலைமையகத்தில் (ஏ.கே.ஜி பவன், தில்லி) வெளியிடப்பட்டது.
சிபிஐ(எம்) தனது அரசியல் நடைமுறை உத்தியை (Political Tactical Line) அகில இந்திய மாநாடு தான் தீர்மானிக்கும். அதற்கு முன்பாக, கட்சியின் மத்திய கமிட்டி அதற்கான ஒரு முன்மொழிவை உருவாக்கும். அதுதான் நகல் அரசியல் தீர்மானம் (Draft Political Resolution) என அழைக்கப்படுகிறது. அது இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.
ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் கட்சி எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய அரசியல் நடைமுறை உத்தி குறித்து கருத்து தெரிவிக்கும் வாய்ப்பை கட்சியின் அமைப்பு சட்டம் வழங்கி உள்ளது. இந்த கருத்துக்களை தொகுத்து கட்சி மாநாட்டில் முன்வைக்கப்படும். அங்கு விவாதிக்கப்பட்டு, பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும். நகல் அறிக்கை இங்கே தரவிறக்கலாம்.
Draft Political Resolution for 24th Congress (Adopted at the Central Committee meeting held on January 17-19, 2025 at Kolkata)
24வது மாநாட்டுக்கான அரசியல் தீர்மான வரைவு (2025 ஜனவரி 17-19 அன்று கொல்கத்தாவில் நடைபெற்ற மத்தியக்குழு கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது)